Vijaykanth health update

ஏற்கனவே இசையில் முன்னணியாக திகழ்ந்த பிரபல முன்னணி பாடகர் கொரோனாவால் பாதிக்க பட்டு 50 நாட்களுக்கும் மேல் போராடி உயிரை இழந்தார் அந்த சோகத்திலிருந்தே வெளிவராத நமக்கு அடுத்த ஷாக் என்னவென்றால் தமிழக மக்களால் மிகவும்
நேசிக்கப்படும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 5 நாட்களுக்கும் மேல் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் உடல்நலத்தைப் பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நினைத்ததை நினைத்த படி நினைத்த இடத்தில் பேசும் சிலரில் நடிகர் விஜயகாந்த் அவர்களும் ஒன்று. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கவே கூடாதென்று வஞ்சகமில்லா நெஞ்சத்தை கொண்ட விஜகாந்த் அவர்கள் கடந்த செப்டம்பர் 22- ம் தேதி மாதம் தோறும் நடக்கும் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தென்பட்டது. உடனே விஜகாந்த் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர் மியாட் மருத்துவர்கள்.

நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜகாந்த் அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிட கூடாது என்று ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து வந்த நிலையில் அன்மையில் மியாட் மருத்துவமனையிலிருந்து ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அதில் சிறு சிறு கொரோனா அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்களின் உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அது சரி செய்யப்பட்டு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்று அறிவித்தது.

அப்பாடா என்று விஜயகாந்தின் ரசிகர்கள் பெரும் மூச்சு விட்ட நிலையில் நேற்று விஜகாந்த்தின் மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை செய்தியை வெளியிட்டது. விஜயகாந்த் அவர்களுக்கும் அரசியலிலும் சரி வாழக்கையிலும் சரி பக்க பலமாக இருந்த பிரேமலதாவின் உடல் நிலையைப்பற்றி தொண்டர்கள் ஆலோசித்து வந்த நிலையில். இன்று அவரது உடல் நிலையும் முன்னேறி வருவதாக மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் பலரும் கொத்து கொத்தாக மடியும் நிலையில் விஜயகாந்த் அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பது சற்று ஆறுதலை அளிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here