Asif bashra suicides

நடிகர் சூர்யா பல தோல்விகளுக்கு பின்னர் சூரரை போற்று திரைப்படம் மூலம் வெற்றியை கண்டு மகிழ்விக்கும் வேளையில் அஞ்சான் திரைப்பட நடிகர் தற்கொலை செய்துள்ளது மிகப் பெரிய சோகத்தை உண்டாகி உள்ளது. 2014 ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா மற்றும் சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலந்த விமர்சனங்களை பெற்றது. இதில் குணச்சித்ர நடித்த ஆசிப் பஸ்ரா தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலிவுட் சினிமா நடிகர் மற்றும் சின்னத் திரை பிரபலமான ஆசிப் பாஸ்ரா பல பாலிவுட் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மஹராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஆசிப் பஸ்ரா 1998-ம் ஆண்டு ஹிந்தி சின்னத் திரையில் ஒளிபரப்பான ஒஹ் என்ற சீரிஸ் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்த ஆசிப் தமிழ் குஜராத்தி மலையாள மொழிகளிகளில் தள ஒரு படம் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் 2020-தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் என்ற மலையாள திரைப்படம் தான்.

Asif bashra

பல வெற்றிகளை கண்ட நடிகர் ஆசிப் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் மன அமைதிக்காக தனியாக இரண்டு மாடி அபார்ட்மெண்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்து விடுமுறை நாட்களை கழித்து வந்துள்ளார். தன் இங்கிலாந்து காதலியுடன் வாழ்ந்து வந்த ஆசிப் நேற்று காலை 10.30 மணியளவில் தான் வளர்க்கும் நாய் குட்டியுடன் வாக்கிங் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வாக்கிங் சென்று பல மணி நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரைத் தேடிய காதலி முதல் மாடியில் அவர் தூக்கிட்டு சடலமாக உள்ளதை கண்டுள்ளார். பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி உடனே அருகில் உள்ள காவல் துறைக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குட்டியின் கழுத்து பெல்ட்டை வைத்து அவர் தூக்கிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Asif bashra

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here