கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் தமிழ்நாட்டில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். அவரது ரசிகர்களிடமிருந்து ஏராளமான அன்பைப் பெற்ற போதிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்கள் தங்கள் குடும்பங்களைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புவதால் அஜித் ரசிகர் மன்றங்களை வைத்திருக்க மறுத்து, அதை அகற்றினார்.
இது ரசிகர்களின் மத்தியில் அவர்மீதான அன்பும் மரியாதையும் அதிகரித்தது. இதுவரை 59 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை சம்பாரித்து வைத்துள்ள அஜித்தைப் பற்றி தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பண மோசடி குற்றச்சாட்டு வைத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வரும் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குனருமான சித்ரா லக்ஷ்மனுடன் உரையாடிய பொழுது 90 களுக்கு முன்னர் அஜித் தன்னிடம் குடும்பத்திற்காக 6 லட்சம் வாங்கினார் எனவும் அதைத் திருப்பி கொடுக்கவில்லை என்னவும் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அவரிடம் படம் நடித்து கொடுப்பதாக 12 லட்சம் பணம் வாங்கி அதையும் திருப்பி கொடுக்க மறுத்து மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதைப் பற்றி அவர் கூறுகையில் மக்கள் அனைவரும் அஜித் அவர்களை நல்லவர் என்று நினைத்து கொண்டுள்ளனர் அதனால் மீடியாக்களும் அவரைப் பற்றி தவறாக எழுதுவதில்லை. ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை அவர் என்னிடம் 18 லட்சம் பணம் வாங்கி இதுவரை கொடுக்கவில்லை என்று கூறி மேலும் பல செய்திகளை அவர் வெளியிட்டுள்ளார் அந்த காணொளி உங்கள் பார்வைக்காக!
ஏன்டா வெளில வேசம் போட்டுட்டு இருக்கீங்க? என மாணிக்கம் நேரடியாக அஜித்திடம் கேள்வி எழுப்பியுள்ளது ரசிகர்களில் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு யூடூப் சேனல் ஒன்று அஜித் மாணிக்கத்தின் மகள் திருமணத்தில் பங்குபெறாததால் தான் அவர் மீது இப்படி குற்றம் சாட்டுகிறார் என்று கூறியுள்ளது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியும் உங்கள் பார்வைக்காக!