Actress Priyamani Tarun relationship

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்து போனாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் மத்தியில் நிலைத்து நிற்பார்கள் அப்படி 2000-களில் தமிழ் சினிமாவில் கலக்கிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிய  ப்ரியாமணிக்கு இப்பொழுதும் ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி சினிமாவில் ப்ரியாமணி பல நடிகர்களுடன் நடிக்கையில் ஒரு நடிகரின் அம்மாவிற்கு ப்ரியாமணியை பெண் கேட்டதாக ஒரு பேட்டியில் ப்ரியாமணி கூறியுள்ளார்.

பெங்களூர் கர்நாடக மாநிலத்தில் தமிழ் ஐயர் குடும்பத்தில் பிறந்த ப்ரியாமணி ஒரு தெலுங்கு திரைப்படத்தின் தோற்றத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் கண்கள் கைது செய் என்ற திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். இருப்பினும், 2007-ம் ஆண்டு இவர் கார்த்தி உடன் சேர்ந்து நடித்த பருத்திவீரன் திரைப்படம் தான் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. அதன் பின் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெற்றி தான்.

Actress Priyamani

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்த ப்ரியாமணிக்கும் புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 போன்ற வெற்றி படங்களில் நடித்த தருணுக்கும் காதல் உள்ளதாக கிசு கிசுக்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து  இதைப் பற்றி சமீபத்தில் ப்ரியாமணியிடம் கேட்டபொழுது ‘நடிகர் தருண் அவர்களின் அம்மா தன்னை அவரது மகன் தருணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதா?’ என்று கேட்டார் என்பதை கூறியுள்ளார்.

அதற்கு ப்ரியாமணி எந்த பதிலும் அளிக்காத நிலையில் நடிகர் தருண் தங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு மட்டுமே உள்ளதை தன் அம்மாவிடம் கூறி புரிய வைத்தாராம். இந்த செய்தியானது தற்பொழுது மக்களிடம் அதிகம் பேசப் பட்டு வருகின்றது. சினிமாவில் நீண்ட நாட்களாக தோற்றமளிக்காத தருண் தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை ப்ரியாமணி கடந்த 2017-ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor TarunPriyamani with her husband

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here