Sleep horoscopic facts

ஓய்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி இந்த உலகத்திலுள்ள விலங்குகள் முதல் நாம் உருவாகும் இயந்திரம் வரை அனைவர்க்கும் தேவையான ஒன்று. ஓய்வில்லாமல் 2 நாட்களுக்கு செய்யும் வேலை என்பது தகுந்த ஓய்வுடன் கூர்மையான புத்தி மற்றும் உடலைக் கொண்டு ஒரே நாளில் செய்து முடிக்கலாம் என்பது சமீபத்தில் நடந்த ஆராச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரங்களை கொண்ட ஒரு நாளில் மனிதர்க்கு சராசரியாக 7-8 மணி நேரம் தூக்கம் தேவை என்பது மருத்துவர்களின் பரிந்துரை. அந்த பரிந்துரையின் படி ஓய்வெடுக்கும் மனிதர்கள் சில பேர் இரவுகளில் சில பேர் பகல்களில் என்று அவர்கள் வாழ்கை முறைக்கேற்ப தூங்குகின்றனர். அதில் சில ராசி காரர்கள் மட்டும் இரவிலும் ஓய்வு வேண்டும் பகலிலும் ஓய்வு வேண்டுமென நினைப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் மட்டும் இப்படி தூங்கி புத்துணர்ச்சி ஆவார்களாம். இவர்கள் ஆற்றலிலும் சிறந்து விளங்குவார்கள். இந்த கீழ்கண்ட 5 ராசிகளில் நீங்களும் ஒருவரா? அப்போ நீங்களும் அதிஷ்டசாலி தான்.

1.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் செய்யும் வேலை இடையில் சிறு சிறு ஓய்வுகளை தேடுபவர்கள். அந்த ஓய்வின் பின் புத்துணர்ச்சியுடன் விரைவில் வேலைகளை முடிக்கும் திறன் கொண்டவர்கள். மதிய நேரம் தூக்கம் என்பது இவர்களுக்கு அன்றாட வாழ்வில் முக்கியமான ஒன்று. வாரத்தில் ஒரு முறையாவது மதியம் தூக்கத்தை எதிர்பார்ப்பார்கள்.

2.தனுஷ்

அதிகம் பயணம் செய்யும் தனுஷ் ரசிகர்களுக்கும் இந்த சிறிய ஓய்வு மிகவும் அவசியம். பயன்களில் அசதிகளை சரி செய்ய எடுக்கும் இந்த ஓய்வு அவர்களை ஒரு மன நிலையில் இருந்த அடுத்து மன நிலைக்கு எடுத்துச்செல்லும் படிக்கல்லாக அமையும். பயணத்தினால் தூக்கத்தை இழக்கும் இவர்களுக்கு இந்த மதிய நேர உறக்கம் மிகவும் தேவையான ஒன்று.

3.மீனம்

நீர் நிலைகளில் உள்ளே மீன்கள் போலவே எப்பொழுதும் வாழ்கை எனும் கடலில் நீந்தி கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு , மதிய நேரங்களில் தூக்கம் என்பது தேவையான ஒன்று அவர்கள் செய்யும் வேலை பாடுகளின் இடையில் அடிக்கடி ஓய்வெடுக்க நினைப்பவர்கள். சோகமாகவோ மகிழ்ச்சியாகவோ சலிப்பாகவோ எப்படி இருந்தாலும் அவர்களுக்கு தூக்கம் தான் சிறந்த மருந்து.

4.மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் இரவு நேர தூக்கத்தை துறந்து பகல் நேரங்களில் குப்பற படுத்து தூங்குவதில் பேராசை கொண்டவர்கள். அதனாலே பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் இரவில் வேலை பார்க்கும் ஆட்களாகவே இருப்பார்கள். மற்ற ராசிக்காரர்கள் போல் இவர்கள் தூக்கத்திற்கு பின் சோர்வாக இல்லாமல் இருமடங்கு புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள்.

5.கடகம்

தேள்களின் கொடுக்கை போல் மனதில் பல வெடிப்புகளை கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனுக்கு நடக்கும் பிரச்சனைகளை நினைத்து கொண்டு இரவினில் தூங்கவே மாட்டார்கள் இதன் விளைவாக தாங்கள் வேலை செய்யும் இடத்தில கிடைக்கும் கேப்புகளில் எல்லாம் ஒரு குட்டி தூக்கம் போடுவார்கள்.

இந்த 5 ராசிக்காரர்களை தவிர மத்த ராசிக்காரர்கள் மதியம் தூக்கம் எடுத்துக்கொள்ள மாட்டர்களா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. மத்த ராசிக்காரர்கள் சில காரணங்களால் மதியம் தூங்குவார்கள் ஆனால் இந்த 5 ராசிக்காரர்களும் காரணமின்றி தூங்குவார்கள் அதுமட்டுமின்றி இவர்கள் பெரும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here