Kasthuri about suchithra

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்த வெற்றிகரமாக 4 வது சீசன் தொடங்கியுள்ளது. எப்பொழுதுமே மற்ற சீசன்களில் சண்டை சர்ச்சைகள் இருந்த அளவிற்கு இந்த சீசனில் இல்லை என்றே கூற வேண்டும். முதல் வாரத்தில் மிகப் பெரிய சண்டைக்கான அறிகுறிகள் இருந்தாலும் அதன் பின் நவுந்து போன பட்டாசாக மாறியது.

சரி வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனாவை அனுப்பினால் நான்றாக பாதிக்கும் என பிக் பாஸ் குழு நினைத்திருந்த நிலையில் அர்ச்சனாவும் நவுத்து போய் வெடிக்காத பட்டாசாகவே மாறியுள்ளார். என்னடா என்ன பண்ணாலும் சண்டை போட்டுட்டு அடுத்த 5 நிமிசத்துலேயே சேர்த்தறாங்க இப்படியே போன நமக்கு கன்டென்ட் கிடைக்காது போலையே என்று நினைத்த பிக் பாஸ் நிர்வாகத்தினர் தற்பொழுது ஒரு வெயிட்டான போட்டியாளரை இரக்க போறாங்க!

Bigg Boss Tamil

மூன்று வருடங்களுக்கு முன்னர் #சுசிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரையும் சம்பித்து போக வைத்த சுசித்ரா தான் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி என்பது 99 சதவீதம் உறுதியாகி உள்ளது. இவர் பிக் பாஸ்ஸிற்கு வருவது எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலரும் யோசித்து வந்த நிலையில் கடைசி சீசனில் பங்கேற்ற கஸ்தூரி அவர்கள் தனது கருத்தை கூறியுள்ளார்.

இதை பற்றி அவர் கூறுகையில்  “Suchileaks புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா contentக்கே ஊரே அலறிச்சு… இங்கே 100 கேமெரா ! Housemates strictly maintain social distance!” என்ற நக்கலடித்துள்ள கஸ்தூரி இவர் தான் மீரா மீது 2.0 என்றும் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இந்த வார எலிமினினேஷனிற்கு பிறகு புதன் அல்லது வியாழக்கிழமை வீட்டினுள் வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அவர் உள்ளே போகும் பொழுது சக போட்டியாளர்களின் முகத்திலும் ஈ ஆடப்போவது உறுதி. அந்த தருணத்திற்கு நாமும் காத்திருப்போம்! 

Suchithra

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here