Prabhu Deva Marriage

இந்திய சினிமாவின் மைகேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபு தேவா அவர்கள் தமிழ் சினிமா மூலம் திரையில் அறிமுகமானார். முதலில் நடன இயக்குனராக ஆரம்பித்த பிரபு தேவா அதன் பின் நடிகராகி தன் திறமைகளால் உயர்ந்து மிகவும் மதிக்கப் படும் கலைமாமணி விருதையும் பெற்றார். சினிமாவில் அவருக்கு கிடைத்த வெற்றி நிஜ வாழ்க்கையில் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.

90’ஸ் களில் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் பிள்ளையை பெற்ற பிரபு தேவா வில்லு திரைப்படத்தின் இயக்குனராக பணியாற்றும் பொழுது நடிகை நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டு தன் மகன் மற்றும் மனைவியை பிரிந்து நயன்தாராவுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார். அந்தக் காதலும் சில ஆண்டுகளே நிலைத்த நிலையில் இருவரும் சில கருது வேறுபாடுகளால் பிரிந்தனர்.

Prabhu Deva Nayanthara

அதன் பின் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்த நிலையில் பிரபு தேவா சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்தார். ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் பிரபு தேவாவின் காதல் பேச்சை எடுத்த மீடியாக்கள் அவருக்கு மருத்துவர் ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது என வதந்திகளை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் பிரபு தேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் பேட்டி ஒன்றில் பிரபு தேவாவின் திருமணம் உண்மை தான் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். கடந்த மே மாதத்தில் லாக்கடவுனினால் சிம்ப்ளாக திருமணம் நடந்து முடிந்துள்ளதாக ராஜு தெரிவித்துள்ளார். மேலும் பிசியோதெரபிஸ்ட்டான மருத்துவர் ஹிமணி பிரபு தேவாவிற்கு சிகிச்சை அளிக்கும் பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக ராஜு சுந்தரம் தெரிவித்துள்ளார்.

பிரபு தேவாவில் மகன் சில வருடங்களுக்கு முன் நோயுற்று இறந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பின் பிரபு தேவாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கி வழிகின்றனர். அவர்கள் திருமண புகைப்படங்கள் இதுவரை எதுவும் வெளியிடவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று.

Raju Sundaram

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here