பிக் பாஸ் தமிழ் சீசன் ௪ யில் பல போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஒரு சில போட்டியாளர்களை தவிர மற்ற போட்டியாளர்களின் அடையாளம் நமக்கு பெரியளவில் தெரியாது. அப்படி அடையாளம் இல்லாமல் பிக் பாஸ் வீட்டினுள் வந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு வருபவர் பாலாஜி முருகதாஸ். மாடலான இவர் அரசியல் காட்சியிலும் ஒரு முக்கிய பதிவி வகித்து வருவது தற்பொழுது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே தனது உடம்பாலையும் தெனாவட்டான பேச்சாளையும் சக போட்டியாளர்களை பாலாஜி மிரட்டி வருகிறார் என பல பேச்சுகள் அடிபட்டு வந்தன. அதன் படியே, கடந்த வாரம் ஏவிக்ட்டான பாடகர் வேலுமுருகன் அவர்கள் பிக் பாஸ் பாலாஜி பற்றின உண்மைகளை தெரிவித்திருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர் தான் பாஸ் என்று நினைத்துக் கொண்டிருக்குகிறார் எனவும் கூறிருந்தார்.
ஒரு பக்க சில போட்டியாளர்கள் அவரை கண்டு வாங்கினாலும் சனம் ஆரி போன்ற போட்டியாளர்கள் தொடர்ந்து அவர்க்கு மாறாக குரல்களை எழுப்பி வருகின்றனர். மேலும் சனம் அவர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் பட்டம் பெற்றார் என்ற அவதூறான செய்தியையும் பரப்பினர் இப்படி பல தவறான வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகளை செய்யும் பாலாஜி அவர்களை பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் ஹாசன் போட்டிருக்கும் ஆடைக்கு ஏற்ப பேச்சுகளிலும் செயல்களிலும் ஈடு படுங்கள் என பாலாஜிக்கு அறிவுறுத்தினார்.
இப்படி சாதாரணமாக வார்த்தைகளை விடுவதற்கு பாலாஜிக்கு எங்க இருந்து தைரியம் வந்தது என்று பலரும் குழம்பி பொய் இருந்ததில் அவர் அரசியல் கட்சியில் இருக்கும் செய்தி வெளிவந்ததுள்ளது. இவர் பிரபல தமிழ் நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியில் மாநில கலை இலக்கிய பிரிவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அவர் கருணாஸ் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அப்புகைப்படம் உங்கள் பார்வைக்காக!