Suchithra to enter bigg boss

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கி மூன்று வாரங்களே ஆன நிலையில் போட்டியாளர்களின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு வருகின்றது. மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் வைல்ட் கார்டு எண்ட்ரியாகயாக 2 அல்லது 3 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சீசனின் இரண்டாம் வைல்ட் கார்டு என்ட்ரி யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

16 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பித்த இந்த சீசனின் இரண்டாம் வாரத்தில் ஜீ தமிழ் தொகுப்பாளர் 17-வது போட்டியாளராக வீட்டினுள் புகுந்தார். இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காதபடி முதல் வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக வைல்ட் கார்டு என்ட்ரி என்றால் சீசன் தொடங்கி 45-50 நாளில் தான் வருவார்கள் ஆனால் இந்த சீனில் சற்று வித்யாசமாக கையாண்டுள்ளனர் என்றே கூற வேண்டும்.

Suchithra

அர்ச்சனாவை தொடர்ந்து மூன்றாம் வாரத்தின் முடிவில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரியை அறிமுகப்படுத்துள்ளதாக பிக் பாஸ் சுற்றுவட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த இரண்டாவது வைல்ட் வார்ட் என்ட்ரி யாரென்றால் தொகுப்பாளர் மற்றும் பாடகரான சுசித்ரா தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன் சுசி லீக்ஸ் என்றே பெயரில் சினிமா பிரபலங்களை உலுக்கி போட்டது யாராலும் மறக்கவே முடியாது.

2017-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை சுசித்ராவின் கணவர் கார்த்திக் தனது மனைவி மனரீதியாக பாதிக்கப்பட்டதால் இது போன்ற பதிவுகளை வெளியிட்டு வருகிறார் யாரும் இந்த பதிவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவித்தார். நடந்து சில நாட்களுக்கு பின் சுசித்ராவும் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு வேற யாரோ இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டுள்ளனர் என்று கூறி அதில் இருந்து தப்பித்தார்.

Suchithra

அதன் பின் வாழ்க்கையில் பல சரிவுகளை கண்ட சுசித்ரா தன் கணவரையும் விவாகரத்து செய்தார். சில நாட்களாக மீடியாக்களில் தோன்றாத சுசி சாந்தக்குளம் பிரச்சனையின் பொழுது அதற்கு ஆதரவு கூறி மீண்டும் வைரல் ஆனார். மிகவும் தைரியமாக பேசப்பட்டிருந்த இந்த விடியோவை கண்டு பலரது பாராட்டையும் பெற்றார்.

உள்ளதை உள்ளபடி பேசும் சுசித்ரா இந்த சீசனில் மற்ற போட்டியாளர்களுக்கு மிக பெரிய வில்லியாக இருப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை. மனதளவில் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மீண்டிருக்கும் சுசித்ராவுக்கு இந்த போட்டி சவாலாக இருக்கும் என்பது உறுதி. மக்களின் தவறான பார்வையையே கொண்ட சுசித்ராவிற்கு அவரை பற்றின கறைகளை அழிக்க இது ஒரு நல்ல மேடையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here