Kasthuri Questioned Bigg Boss

வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பல நாடுகளைத் தாண்டி முதன் முதலாக ஹிந்தியில் ரிமேட் செய்யப்பட்து. 10 சீசன்களுக்கு மேல் வெற்றிப்பாதையில் சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை தென் இந்திய மொழிகளிலும் பிரபல படுத்த நினைத்த அந்நிறுவனம் தென் இந்தியா மொழிகளிலும் ஆரம்பித்தது. அந்த வகையில் தமிழிலும் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் 3 சீசன்களாக கமல் ஹாசன் தொகுப்பில் வெற்றி நடை போடுகின்றது.

இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்க உள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்ற கஸ்தூரி அவர்கள் தன் சம்பள பாக்கியை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். 1990 களில் மிகவும் பிரபலமான நடிகை கஸ்தூரி 35 ற்கும் மேற்பட்ட படங்கள் 4 தென் இந்திய மொழிகளில் நடித்துள்ளார். கிளமெரில் நல்ல பங்கு வகிக்கும் இவரை பிக் பாஸ்ஸில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே இழுத்தனர்.

உள்ளே போன இவர் சக போட்டியாளர்களுடன் தாக்கு பிடிக்க முடியாமல் ௧௭ நாட்களில் வெளியேறினார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றின சில சில செய்திகளை வெளியிட்டுவந்தாலும் சம்பள பாக்கியை பற்றி பேசியதே இல்லை. ஆனால் இம்முறை அவர் மக்களின் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சைக்குரிய ஒன்று.

இதை பற்றி அவர் கூறுகையில் “ஒரு வருடங்களுக்கு மேல் என் சம்பளத்தை நிறுத்தி வைத்திருக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே மனுமிஸ்ஸின் குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான்! நான் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பொய்யான வாக்குறுதியை எதிர்பார்க்க வில்லை!” என்று வருத்தத்தை தெரிவித்துள்ளார். மனுமிஸ்ஸின் குழந்தைகள் என்றால் அடிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள்.

இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமே கோடி கணக்கில் சம்பாதிக்கும் இவர்கள் சம்பள பாக்கி வைத்திருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சிரியம் தான். இந்த வைரலானட்வீட் பிக் பாஸ் சீசன்4 யில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

Kasthuri-tweet

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here