Singer thirumoorthy affected with corona

பிறவி முதலே பார்வையை இழந்த திருமூர்த்தி சமீபத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்த “விஸ்வாசம்” திரைப்படத்தில் டி இமான் இசையில் இடம்பெறும் “கண்ணான கண்னே” பாடலைப் பாடி இணையதளத்தில் வைரலானார். இதைக்கண்ட லட்சக் கணக்கான ரசிகர்களில் இசையமைப்பாளர் டி இமானும் ஒன்று. அதன் பின் இவரது விலாசம் கேட்டறிந்த இசையமைப்பளார் இந்த 20 வயது திறமைக்கு வாய்ப்பளிப்பதாக கூறி இருந்தார்.

சொன்ன வாக்கை காப்பாற்றிய இமான் அவர்கள் இரத்தின ஷிவா இயக்கத்தில் ஜீவா நடித்த “சீறு” திரைப்படத்தில் வாய்ப்பளித்தார். அதில் பார்வதி வரிகளில் இமான் இசையில் “செவ்வந்தியே” என்ற பாடலை பாடிய திருமூர்த்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில் நொச்சில்பட்டி கிராமத்தில் பர்குர் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி கொரோனவால் பாதிக்க ப்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்ப கட்ட நிலை என்பதால் கொரோனா சரிசெய்யப்பட்டு மற்ற நோயாளிகளுடன் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

எந்த விதமான பயிற்சிகளுமின்றி தானாக முன்வந்து தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திருமூர்த்தி அவர்கள் மருத்துவமனையிலும் சென்று அங்குள்ள வாட்டர் பாட்டில் மற்றும் டூத் பிரஷ்களை வைத்து இசையுடன் பாடலை பாடி நூற்றுக்கணக்கான சக நோயாளிகளுக்கும் சந்தோசத்தை அளித்து வருகிறாராம். இசை எங்கு சென்றாலும் அழியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர்.

இந்தத் திறமை விரைவில் பூரண குணமாகி சினிமாக்களில் மேலும் நிறைய பாடல்களை பாட வாழ்த்துக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here