நடிகை சமந்தா அவர்கள் தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.இவர் தமிழில் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இவர் தெலுங்குவில் ஏ மாயா சேசாவே மூலம் களம் இறங்கினார்.பின்னர் இவர் பானா காத்தாடி,நீதானே என் பொன்வசந்தம்,அஞ்சான்,கத்தி, 10 என்றதுகுள்ள,தங்கமகன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/01/b2c0945be97152e20b633c4102dab2974671522276732221494-576x1024.jpg)
சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 4, சாம் ஜாம்,தி ஃபேமிலி சீசன் 2 போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/01/samantha-production-house-scaled2889256703802155054-1024x576.webp)
முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வளம் வந்த நேரத்தில் அவர் தனது காதலை வெளிப்படையாக அறிவித்து குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார்.அதற்கு பிறகு சினிமா துறையில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.அவர் திடீர் என மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற சினிமா துறையில் இருந்து விலகினார்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/01/samantha-ruth-600x3373386859126475182324-1.jpg)
இப்படி ஒரு நிலையில் சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் நாக சைதன்யா பற்றி மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.”எனது வாழ்கையில் எடுத்த பல முடிவுகளில் எனது பார்ட்னரின் influence தான் காரணம்.எனக்கு என்னை பிடிக்கும் பிடிக்காது என்பதை கூட இத்தனை காலம் மறந்துவிட்டு இருக்கிறேன் என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2024/01/24-65a90e7e577c81998203516700551769.jpeg)