Bakkiya Raj daughter Saranya

பிரபல நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான பாக்கியராஜ் 80’ஸ் மற்றும் 90’ஸ் களில் தமிழ் சினிமா-வில் பெரும் பங்கு வகித்தார். “16 வயதினிலே” திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி “சுவரில்லாத சித்திரங்கள்” என்ற திரைப்படம் மூலம் 1979-யில் இயக்குனர் ஆனார். அதற்கு முன்பே கதாநாயனாக “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா வளர்ச்சிக்கான அடித்தளமாக இருந்த பாக்கியராஜ் தன் பிள்ளைகளையும் சினிமாவிலேயே ஈடுபடுத்தினார். பிரபல நடிகையான பூர்ணிமா அவர்களை 1984-ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் அவர்கள் இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்தனர். பாக்கியராஜ் பூர்ணிமா தம்பதியினரின் மூத்த மக்களது பெயர் சரண்யா மற்றும் இளைய மகன் பெயர் சாந்தனு ஆகும்.

தன் தந்தையின் வழிகாட்டிலேயே நடிகரான இளைய மகன் சந்தனு இது வரை சக்கரக்கட்டி, சித்து +2 போன்ற திரைப்படங்கள் உட்பட இதுவரை 10-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக தோன்றியுள்ளார். இவர் விரைவில் வெளியாகவிருக்கும் தளபதி விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்,இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு படங்கள் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இவர் பிரபல கலைஞர் தொலைக்காட்சி தொகுப்பாளினியான கி கி (கீர்த்தி) என்பவரை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல் பாக்கிய ராஜ் மூத்த மகள் சரண்யாவும் ௨௦௦௬ யில் தன் தந்தை இயக்கத்தில் வெளியான பாரிஜாதம் திரைப்படம் மூலம் கதாநாயகியான சரண்யா அத்திரைப்படத்தில் நடித்த ப்ரித்திவிராஜூடன் சில சர்ச்சைகளில் சரண்யா ஈடுபடுத்தப்பட்டார். இதைக்கண்டு சினிமாவை விட்டு விலகி ஆஸ்திரேலியா நாட்டில் படிக்கச்சென்றார். அங்கு ஆஸ்திரேலியா வாழ் இந்தியருடன் காதல் வலையில் விழுந்த சரண்யாவிற்கு அந்த காதலும் தோல்வியில் முடிந்தது.

அதன்பின் வீடு திரும்பி சரண்யா சில நாட்கள் வீட்லேயே முடங்கி விட்டார். சில நேரங்களில் படப்பிடிப்புக்கு சென்று வரும் நிலையில் தற்கொலை முயற்சிகள் செய்ததும் உண்டு. இது வரை மூன்று முறை காப்பாற்றப்பட்டுள்ளார். தன் காதல் ரகசியத்தை அறிந்த பாக்கியராஜ் பூர்ணிமா தம்பதி அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் சரி ஆகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் அதையும் மறுத்த சரண்யா, தனக்கு 34 வயதாகியும் திருமணம் செய்யவில்லை.

இவர் 2007- ம் ஆண்டு நடித்த “வளையம்” திரைப்படம் பல ஆண்டுகள் பல போராட்டங்களுக்கு பின் 2019- ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து 14 ஆண்டுகள் களித்து பாக்கியராஜின் மகள் சரண்யா திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகார பூர்வமான செய்தி வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில் இது ஒரு அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. பாக்கிய ராஜ் போலவே நடிப்பில் மயக்கும் மந்திரத்தை வைத்திருக்கும் சரண்யா இத்திரைப்படத்தில் நல்ல கம் பேக் கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here