Velmurugan Property

பிக் பாஸ் தமிழ் சீசன் ௪ நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் 18 போட்டியாளர்களின் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாம் வாரத்தில் ரேகா வெளியேறிய நிலையில் மூன்றாம் வாரம் பாடகர் ஆஜீத் அவர்கள் குறைவான வாக்கால் வெளியேற்றப் படும் நிலை வந்தது ஆனால் ஆஜீத் அவர் வைத்திருந்த பிரி பாசை பயன்படுத்தி எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

ஆதலால் நான்காம் வாரத்தில் ௧௧ பேரை கொண்டு நடந்த நாமினேஷன் பிராஸில் ஆரி பாலா சனம் அனிதா என பலரும் மக்களால் காப்பற்றப்பட்டு கடைசியாக ஆஜீத் அல்லது வேல்முருகன் வெளியேறும் நிலையில் இருந்தது. ஆஜீத் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வேல்முருகன் வெளியேற்றப்பட்டார். ஞாயமாக விளையாடி வெளியில் வந்த வேல்முருகனின் வாழ்கை முறையை பற்றி தற்பொழுது பல செய்திகளும் வெளிவர தொடங்கியுள்ளது. அதில் ஒன்று தான் வேல்முருகனின் வீடு!

Velmurugan

அவர் பிக் பாஸ் வீட்டினில் முதல் வாரத்தில் கூறியபடி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வேல்முருகன் ஒரு வேலை சாப்பாட்டிற்காக பள்ளிக்கு சென்று படித்தவர். ஆனால் இவர் குரல் தன் வாழ்க்கையையே மாற்றி விட்டது. ஜெம்ஸ் வசந்த் இசையில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம்பெறும் மதுர குலுங்க குலுங்க பாடல் மூலம் 2008-ம் ஆண்டு அறிமுகமான வேல்முருகன் இதுவரை எக்கச்சக்கமான கிராமப்புற பாடல்களை பாடியுள்ளார்.

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஒத்த சொல்லால, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், வேணாம் மச்சான் வேணா என பல வெற்றி பாடல்களை பாடியுள்ள வேல்முருகன் பாடல்களில் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் வருமானத்தை ஈட்டி வருகிறார். சொகுசாக வாழ்த்து வரும் வேல்முருகன் எதற்காக பிக் பாஸ் வீட்டினுள் சென்று அவமான பட வேண்டும் ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டினை ஒரு பார்வை!

1 COMMENT

  1. ஆடம்பரமாக இருந்தால் சொத்துக்கள் இருந்தால் பிக்பாஸ்ஸில் நடிக்க கூடாதா என்று சட்டம் இருக்கா ? அவர் சொத்துகள் வைத்திருந்தால் அவருக்கு அவர் குடும்பத்திற்க்கு வைத்திருக்கிறார் அவருடைய குரலால் பாடி பல மேடைகளில் கை தட்டல்களை வாங்கி அவர் சேர்த்த சொத்து அதனுள் நாம் தலையிடுவது மிக மிக தவறு தயவு செய்து யாரும் அவருக்கு சொத்து இருக்கு என்று கூறாதீர்கள் ..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here