Soorarai Potru Dialogue writer

2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் சுதா கங்கோரா தயாரிப்பில் சூர்யா மற்றும் ஷாலினி நடிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் சூரராய் போற்று. கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே பட பிடிப்பை முடித்த படக் குழு அத்திரைப்படத்தின் இசை விழாவையும் முடித்தது. ஜி வி பிரகாஷ் இசையில் வெளிவந்த அணைத்து பாடல்களும் ஹிட் ஆனது.

பாடல்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் திரையரங்குகளும் மூடப்பட்டதால் திரைப்படத்தை வெளியிடவும் தாமதமாகியது . மக்களின் நலனுக்காகவும் அரசு விதிமுறைகளை மதிக்கவும் சுரரை போற்று படக்குழு தங்கள் படத்தை அமேசான் நிறுவனத்துக்கு விற்க முடிவெடுத்தனர்.

Soorarai Potru

பேசியபடி படக்குழு ஆன்லைன் செயலியான அமேசானிடம் 20-கோடிக்கு திரைப்பட விற்றது. திரைப்படத்தை வாங்கி அமேசான் அக்டோபர் மாதம் 30-ம் தேதி இணையம் வழியில் வெளியிடுவதாக அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகளால் 30-ம் தேதியிலிருந்து பின் வாங்கி அமேசான் நிறுவனம் வருகின்ற நவம்பர் மாதம் 12-ம் தேதி வெளியிடுவதாக அறிவிப்பை மாற்றியுள்ளது.

இதற்கிடையில் அத்திரைப்படத்தின் ட்ரைலரை அமேசான் நிறுவனம் வெளியிட்ட நிலையில் பல சாதனைகளை முறியடித்து வருகின்றது இந்த சுரரை போற்று திரைப்படம். அதிலும் அதில் வரும் வசனங்கள் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அத்தகைய வசங்களை நமக்காக எழுதியவர் உறியடி திரைப்பட நடிகர் விஜய் குமார் தான்.

தனது முதல் படத்திலே அரசியல் வசனங்களில் புகுந்து விளையாடிய விஜய் அவர்கள் கண்டிப்பாக சுரரை போற்று திரைப்படத்திலும் கலக்கி இருப்பார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சூர்யாவிற்கும் இது திருப்புமுனை படமாக அமையுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்திரைப்படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்காக!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here