ஞானவேல் ராஜா தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெட்ரா இத்திரைப்படம் இன்றைய காதலர்களை கூட தன் வசம் இழுத்து போடுகின்றது. இதில் குழந்தை கதாபாத்திரத்தில் தோன்றிய ஷரியா சர்மாவிற்கு சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் ஆசை என்று மனதில் உள்ளதை கூறியுள்ளார்.
1997-யில் பிறந்த ஷரியா சர்மா அவர்கள் தெலுங்கு படங்களில் அதிகம் தோற்றமளித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஷரியா சர்மா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “எந்திரன்”, ஜீவாவின் “நீ தானே என் பொன்வசந்தம்” போன்ற வெற்றித் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். இவர் ஹிந்தி படங்களிலும் அதிகம் தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கது.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2020/09/87211421_1035058720197672_6991526115586187926_n-832x1024.jpg)
2016-ம் ஆண்டு “நிர்மலா கான்வென்ட்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் தோன்றிய ஷரியா சர்மா அதன்பின், எந்த ஒரு படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. சமீபத்தில், அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் மூலம் ட்ரெண்ட் ஆனா ஷரியா சர்மா மீது தற்பொழுது திரையுலகினர் கண்கள் திரும்பி உள்ளது. இதன் காரணமாக பல மீடியாக்களும் ஷரியா ஷர்மாவை நேர்காணலுக்காக பதிவு செய்து வருகின்றன.
அந்தவகையில் தற்பொழுது மாடலிங்யில் ஈடுபட்டு வரும் ஒரு தனியார் மீடியாவுக்கு பேட்டியளித்த பொழுது சூர்யா மற்றும் ஜோதிகா உடன் நடித்த அனுபவத்தை கூறி இருந்தார். இதை பற்றி அவர் கூறுகையில் “சில்லுனு ஒரு காதல் திரைப்படம் எப்பொழுது எனக்கு ஒரு மிக பெரிய திரைப்படம் தற்பொழுது கூட நான் அதை பார்த்து ரசிக்கிறேன். திரைப்படம் ஷூட்டிங் பொழுது சூர்யா மற்றும் ஜோதிகா அவர்கள் வாங்கி கொடுத்த இரண்டு பொம்மைகளை நான் மறக்கவே மாட்டேன்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2020/09/258b52f7b31e407322af02ca1b1b6b22.jpg)
என் பெற்றோர்கள் என்னை வாங்க கூடாதென்று கண்டித்தாலும், ஒரு குழந்தையாக என்னால் மறுக்கவே முடியவில்லை. அதனால், அவர்கள் சொன்ன படியே பொம்மை கடைக்கு சென்று எனக்கு பிடித்த இரண்டு பொம்மைகளை வாங்கி கொடுத்தனர். அது ஒரு அழகிய அனுபவம்.
எனக்கு சூர்யா அவர்களுடன் ஜோடியாக நடிப்பதில் மிகுந்த ஆசை உள்ளது. நடிகை மீனா அவர்கள் ரஜினிகாந்த் உடன் மகளாகவும் கதாநாயகியாகவும் நடித்தது போல், எனக்கும் சூர்யா உடன் அந்த வாய்ப்பு கிடைத்தால் நான் மிகப்பெரிய அதிஷ்டாசாலி” என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதை சூர்யா அவர்களும் அவரது ரசிகர்களும் ஏற்றுக்கொள்வது கடினம் தான்.
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2020/09/24274193_908253129339521_2412105508048601088_n-1024x683.jpg)
![](https://news.mokkapostu.com/wp-content/uploads/2020/09/22221295_159495297968747_1899768089193480192_n-987x1024.jpg)