Kushboo Memories

சினிமா பிரபலங்களான சுந்தர் சி மற்றும் குஷ்பூ கடந்த 2000-ம் ஆண்டு 6 வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்டனர். தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திவரும் நிலையில் இவர்கள் இருவரும் சில நடங்கங்களிலும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் குஷ்பூவிடம் பேட்டி எடுத்த பொழுது அவருக்கு எதனால் சுந்தர் சி யின் மீது காதல் மலர்ந்தது என்ற ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

90 களின் மிகவும் பிரபலமான நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என தென் இந்திய மொழிகளில் இதுவரை 200 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார். முத்துராம் இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, சுஹாசினி போன்றோரின் நடிப்பில் 1988 ம் ஆண்டு வெளிவந்த “தர்மத்தின் தலைவன்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான குஷ்பூ 2000 வரை கதாநாயகியாக நடித்தார் அதன் பின் துணை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். தற்பொழுது இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Kushboo

தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இதுவரை 32 திரைப்படங்களில் இயக்குனராகவும் 22 திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். இவர் 2014 ம் ஆண்டு இயக்கி நடித்து வெளிவந்த அரண்மனை திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பேய் படங்களில் அதிகம் நடித்து வரும் சுந்தர் சி கடைசியாக நடித்த திரைப்படம் 2020 ம் ஆண்டு வெளிவந்த “இருட்டு”. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி தராதது குறிப்பிடத்தக்கது.

குஷ்பூ மற்றும் சுந்தர் சி அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டது நம் அனைவர்க்கும் அறிந்தவையே. பிப்ரவரி மாதம் 22 ம் தேதி 1995 ம் ஆண்டு சுந்தர் சி குஷ்பூவிடம் தன் காதலை தெரிவித்தார். காதலுக்கு உடனே ஓகே சொன்ன குஷ்பூ 6 ஆண்டுகளாக காதலித்து மார்ச் 9 2000 தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா ஆனந்தித்த என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Khushboo Sundar C Family

இவர்களது காதல் கதையை பற்றி குஷ்பூவிடம் கேட்டபொழுது சுந்தர் சி தனது மனதை பறித்த தருணத்தை கூறி மகிழ்ந்தார். இதைப் பற்றி அவர் கூறுகையில் “சுந்தர் சி உள்ளத்தை அள்ளிக்கொண்டாள் படப்பிடிப்பிற்கு ஊட்டி வந்திருந்த பொழுது நானும் ஒரு மலையாள திரைப்பட படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தேன். எதிர்ப்பாராத விதமாக சந்தித்த நாங்கள் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பம்பாய் திரைப்படத்தை காண மற்ற படப்பிடிப்பு குழுவினருடன் திரை யரங்குக்கு சென்றோம்.”

“அப்பொழுது நான் திரைப்படம் பார்க்க வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் திரையரங்கு வெளியில் எங்களை சூழ்ந்தனர். அந்த நிமிடத்தில் என் பாதுகாப்புக்கு பொறுப்பேற்ற சுந்தர் சி எனது கைகளை பிடித்துக்கொண்டு ரசிகர்களை கடந்து என் வீட்டில் பத்திரமாக சேர்த்தார். அந்த தருணத்தில் சுந்தர் சி ஒரு ரியல் ஹீரோவாக தெரிந்தார்! அந்த தருணம் தான் நான் சுந்தர் சி யுடன் காதலில் விழுந்த தருணம்” என்று முகம் நிறைந்த வெட்கத்துடன் கூறினார். அந்த காணொளி உங்கள் பார்வைக்காக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here